News March 27, 2024
டீசல் விலையால் விலைவாசி உயர்ந்துள்ளது

டீசல் விலை அதிகரித்ததே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அத்தியாவசியப் பொருட்கள் 40% அளவுக்கு விலையேற்றம் கண்டதாக குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாகக் கூறினார். மேலும், வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி என திமுக அரசு அனைத்திற்கும் வரி விதிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News February 10, 2026
இனி AI என குறிப்பிடுவது கட்டாயம்: மத்திய அரசு

இனி AI மூலம் உருவாக்கப்படும் அனைத்து போஸ்ட்களிலும் அவை AI என்று குறிப்பிடுவது அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தவறான அல்லது சட்டவிரோத AI போஸ்ட்களை, சமூக ஊடக தளங்கள் 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது, SM-ல் டீப்ஃபேக் வீடியோக்கள் & தவறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
News February 10, 2026
பிரபல நடிகைக்கு 2-வது திருமணம்: மகள் உருக்கம்

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் சுரேகா வாணி, தமிழில் மாஸ்டர், மெர்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் 2019-ல் காலமானார். இந்நிலையில், சுரேகாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக அவரது மகள் சுப்ரிதா தெரிவித்துள்ளார். மீண்டும் திருமணம் வேண்டாம் என அம்மா மறுத்துவிட்டதாகக் கூறும் சுப்ரிதா, தனது திருமணத்திற்கு முன்பே அம்மாவுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளாராம்.
News February 10, 2026
தவெகவின் பெரிய தலைகள் இங்குதான் போட்டியா?

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, விஜய் வேளச்சேரி (அ) விருகம்பாக்கத்திலும், புஸ்ஸி ஆனந்த் கடலூரிலும் போட்டியிட விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஆதவ் கள்ளக்குறிச்சியிலும், நிர்மல் குமார் உசிலம்பட்டியிலும், அருண்ராஜ் திருச்செங்கோட்டிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனராம்.


