News January 30, 2025

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்: தல வரலாறு (பாகம் – 3)

image

இந்த ஆலயத்தில் காணப்படும் பிரம்மாண்ட குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இதனை ‘ஹரித்ராந்தி’ என்று அழைக்கிறார்கள். இதை தவிர துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய பெயர்களிலும் இக்குளம் அழைக்கப்படுகிறது. 11 நிலைகளை கொண்டு வித்தியாசமான அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் குறித்து அடுத்த பதிவில் காணலாம். SHARE!

Similar News

News July 9, 2025

திருவாரூர்: ஆற்றில் மூழ்கிய கூலி தொழிலாளியின் உடல் மீட்பு

image

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முகமது ஹனிபா (56). இவர், நேற்று முன்தினம் பாய்க்காரத் தெரு பாலம் அருகில் உள்ள வெண்ணாற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது, ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி மாயமானார். இதனை அடுத்து கூத்தாநல்லூர் தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து, நேற்று முன்தினம் முதல் தேடும் பணியில் ஈடுபட்டு, நேற்று மாலை முகமது ஹனிபாவின் உடலை மீட்டனர்.

News July 9, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய ரோந்து பணி காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 8 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை. இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல்துறையின் உடனடி உதவிக்கு எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News July 8, 2025

திருவாரூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. <>இதற்கு உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் அறிய திருவாரூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை (04366 290536) அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!