News January 30, 2025
நமல் ராஜபக்ச குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் வழக்கில் இலங்கை EX PM மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015இல் இந்திய முதலீட்டில் இருந்து வந்த பணத்தை முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2016 ஜூனில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு, கொழும்பில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
அண்ணாதுரை பொன்மொழிகள்

*கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லை என்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
*எதிரிகள் தாக்கித்தாக்கி தங்களது வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித்தாங்கி வலுவை பெற்றுகொள்ளுங்கள்.
*நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
*பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட பிறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
News September 2, 2025
ஆப்கனுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், 15 டன் உணவுப் பொருள்கள், 1,000 டெண்ட்டுகளை இந்தியா நிவாரண உதவியாக ஆப்கனுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் தேவையான உதவிகள் அளிக்க தயார் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News September 2, 2025
விமர்சனம் கழுத்தை துண்டிக்க கூடாது: மிஷ்கின் வருத்தம்

திரை விமர்சனம் என்பது ஒரு கலைஞனின் கழுத்தை துண்டிப்பது போல் இருக்கக்கூடாது என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். சினிமா விமர்சனங்கள் படங்களின் வியாபாரத்தை கெடுப்பதால், தயாரிப்பாளர்கள் பல நேரங்களில் தடுமாறுவதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் மிஷ்கின் இவ்வாறு கூறியுள்ளார். இருப்பினும், விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். நீங்க என்ன நினைக்கிறீங்க?