News January 30, 2025
திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது… அண்ணாமலை பேட்டி

திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு முழுமுதற் காரணம் PM மோடிதான் என்று கூறினார். சென்னையில் திமுக காெடியுடன் பெண்களை காரில் சிலர் துரத்தியதே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் சாடினார். அண்ணாமலை தெரிவிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 2, 2025
ஆகஸ்ட்டில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ஆகஸ்ட் மாதத்தில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஆகஸ்ட்டை விட(₹1.75 லட்சம் கோடி) 6% அதிகமாகும். தமிழகத்தை கணக்கிட்டால் கடந்த ஆண்டை விட 9% அதிகம் வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. தீபாவளியன்று ஜிஎஸ்டி குறைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 2, 2025
தினமும் லேட்டாக தூங்குபவரா நீங்கள்?

தினமும் இரவில் யூடியூப், வெப்சீரிஸ், ரீல்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? இத கவனிங்க. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை., ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம். ஆகவே, நேரத்துக்கு தூங்குங்க.
News September 2, 2025
தேர்தல் பரப்புரைக்காக மெகா பிளான் போடும் விஜய்

2 மாநாடுகளை நடத்திய தவெக தலைவர் விஜய், அடுத்ததாக தேர்தல் பரப்புரைக்கு திட்டமிட்டு வருகிறார். வருகிற 17-ம் தேதி பெரியார் பிறந்த நாளன்று மக்கள் சந்திப்பை தொடங்குவதே அவரது திட்டமாம். அதுவும் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலேயே பரப்புரையை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பனையூர் தவெக அலுவலகத்தில் பரப்புரை வாகனம் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை வியூகம் வெல்லுமா?