News January 30, 2025
மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று!

என் வாழ்க்கையே எனது செய்தி! எனக் கொண்ட கொள்கையில் உறுதியையும், அறப்போராட்டத்தையும் தன் வாழ்க்கையாகக் கொண்ட தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவுதினம் இன்று! இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு என்றவரை, கோட்சே 1948 ஜனவரி 30 டெல்லி பிர்லா மாளிகையில் சுட்டுக்கொன்றது இன்றுதான். இந்த நாளில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகள் தினமாக சிறப்பு செய்கிறோம்.
Similar News
News September 2, 2025
10 நாள் பொறுங்க.. வெற்றிமாறன் செம அப்டேட்

இன்னும் 10 நாள்களில் ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட்டை கூறுவதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் படம் தள்ளிப்போனதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் ‘Bad Girl’ பட விழாவில் வெற்றி இவ்வாறு கூறியுள்ளார். சூர்யாவுக்கு கம்பேக் கொடுக்குமா வாடிவாசல்?
News September 2, 2025
ஒரே அறையில் தனித்தனியாக படுக்கும் தம்பதியர்

நல்ல தூக்கத்துக்காக ‘தனியாக தூங்கும்’ முறையை ஜப்பானிய தம்பதியர் பின்பற்ற தொடங்கியுள்ளனராம். ஒரே அறையில் தனித்தனியான படுக்கைகளில் கணவன்- மனைவி படுத்து உறங்குகின்றனர். துணைவரின் குறட்டை சத்தத்தால் இருவரின் தூக்கமும் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த ஏற்பாடாம். ஆனால், இது நெருக்கத்தை குறைப்பதாக ஒருசாரார் விமர்சிக்க, ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைய இதுதான் காரணமா என நெட்டிசன்களும் கேட்கின்றனர்.
News September 2, 2025
திருடுவதை வழக்கமாக்கியுள்ள PM மோடி: கார்கே

அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய அரசு கவிழும் என்று காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஏழைகள், பெண்களுக்காக பணியாற்றும் அரசு விரைவில் அமையும் என்றும் அவர் கூறினார். பிஹாரில் நடைபெற்றுவரும் பேரணியில் பேசிய அவர், PM மோடி திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக விமர்சித்தார். வாக்குகளை திருடும் அவர், வங்கிகளை கொள்ளையடிப்பவர்களை காப்பதன் வாயிலாக பணத்தை திருடுகிறார் என்று கடுமையாக சாடினார்.