News January 30, 2025

எத்தனால் விலையை உயர்த்தியது மத்திய அரசு

image

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் எத்தனாலுக்கான விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, லிட்டர் ஒன்றுக்கு ₹56.58இல் இருந்து ₹57.97ஆக உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News September 2, 2025

10 வாரங்களில் கதையை மாற்றிய இந்தியா!

image

கடந்த ஜூன் 26-ம் தேதி சீனாவில் நடைபெற்ற SCO பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டு பிரகடனத்தில் பஹல்காம் தாக்குதலை கண்டிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் ராஜ்நாத் சிங்கும் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால், இன்று அதே SCO மாநாட்டு பிரகடனத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தானும் கையெழுத்திட்டிருந்தது. இது இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.

News September 2, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News September 2, 2025

ஆகஸ்ட்டில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

image

ஆகஸ்ட் மாதத்தில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஆகஸ்ட்டை விட(₹1.75 லட்சம் கோடி) 6% அதிகமாகும். தமிழகத்தை கணக்கிட்டால் கடந்த ஆண்டை விட 9% அதிகம் வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. தீபாவளியன்று ஜிஎஸ்டி குறைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!