News March 27, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 18, 2025

‘புலி’ டைரக்டருடன் இணையும் விமல்

image

இயக்குநர் சிம்புதேவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் விமல் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஃபைனான்சியருடன் இணைந்து சிம்புதேவனே இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக, இயக்கிய ‘போட்’ தோல்வியடைந்ததால், பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற சிம்புதேவனின் ஆசை பாழான நிலையில், தற்போது விமல் இணைந்துள்ளார்.

News September 18, 2025

உலகின் உயரமான Top 10 கட்டடங்கள்!

image

பொதுவாக உயரமான கட்டடங்களை பார்க்கும் போது எப்போதுமே வியப்பாகத்தான் இருக்கும். வானை எட்டும் உயரத்துக்கு இருக்கிறதே, எப்படி கட்டியிருப்பார்கள் என்றெல்லாம் மலைத்து நின்று இருப்போம். உலகின் உயரமான டாப் 10 உயரமான கட்டடங்களின் போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள். உங்களை கவர்ந்தது எது என்பதை கமெண்ட் செய்யுங்கள். லைக் செய்தும் உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள்.

News September 18, 2025

காலையில் வெடிக்க போகும் அரசியல் பூகம்பம்!

image

ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ஆனால், எந்த விவகாரம் குறித்து பேச உள்ளார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது. இருப்பினும், 2 மாநிலங்களில் உள்ள 2 தொகுதிகள் மற்றும் ஒரு High Profile லோக்சபா தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!