News March 27, 2024
ஆட்டோவை தவிர்க்க காவல்துறை அறிவுரை

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தினம்தோறும் பல்வேறு விபத்துக்கள் குறித்தும், சாலை விதிகள் விழிப்புணர்வு குறித்தும் அறிக்கை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோவை தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தையின் உயிரை பணயம் வைக்காதீர்கள்” என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
நெல்லை முக்கிய ரயில் நவ.30 வரை எழும்பூர் செல்லாது

நெல்லை வழியாக சென்னை செல்லும் கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் எண் 20 636 நாளை 10ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும் எழும்பூர் செல்லாது மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News November 9, 2025
நெல்லை: சிறுமியிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது

பேட்டை எம் ஜி பி 5 வது வடக்கு தெருவை சேர்ந்தவர் மீரான் மைதீன் (50). இவர் நேற்று முன்தினம் சுத்தமல்லியை சேர்ந்த சிறுமியுடன் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மீரான் மைதீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
News November 9, 2025
நெல்லை : 12th PASS – ஆ…? அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: தமிழக அரசு
2. காலியிடங்கள்: 1429
3. கல்வித் தகுதி: 12th, + 2 ஆண்டு சுகாதார பணியாளர் படிப்பு சான்றிதழ்
4.சம்பளம்.ரூ.ரூ.19,500 – ரூ.71,900
5. கடைசி நாள்: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


