News January 29, 2025

 தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணி விரைவில் நிறைவு

image

நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர், திசையன்விளை, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி திருக்குறுங்குடி ஆகிய 7 நகர பஞ்சாயத்து களக்காடு நகராட்சிக்கும் 423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு பெற்று பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என  சபாநாயகர் அப்பாவு பணகுடியில் நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

39969 பேரின் எஸ்ஐஆர் விவரம் பதிவேற்றம் – கலெக்டர் தகவல்

image

நெல்லையில் 1490 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு
வீடாகச் சென்று எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்களை வழங்குகின்றனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,18,325ல் 13,36,667 பேருக்கு (94.2%) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொபைல் மூலம் நிரப்பிய படிவங்களை பெற்று ஆப்பில் பதிவேற்றம் செய்கிறார்கள். இதுவரை 39,969 பேரின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.

News November 15, 2025

நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

image

நெல்லை மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT.

News November 15, 2025

நெல்லை: பைக் திருட்டு.. தவெக நிர்வாகி கைது!

image

விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் பைக் கடந்த 12ம் தேதி புதிய பஸ் நிலையத்தில் திருடுபோனது. போலீசில் புகார் அளித்தார். சிறிது நேரத்தில் இருவர் பைக்கை தள்ளி வந்த போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும் மற்றொருவர் தங்க ராஜா என்பதும் இன்று தெரிய வந்தது. பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட வந்த போது மாட்டிக்கொண்டனர்.

error: Content is protected !!