News March 27, 2024
புதுவை அருகே காவல்நிலையம் முற்றுகை

உருளையன்பேட்டை சேர்ந்த அய்யூப் பெரியமார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடையை அபகரிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் மிரட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து நில அபகரிப்பு கும்பல் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என அத்தொகுதி எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து இன்று திடீரென பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், நாளை (நவ.29) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
புதுச்சேரி: சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

மத்திய அரசின் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் மீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், செல்லிப்பட்டு பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். செல்லிப்பட்டு சாலை சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏ ஆதரவாளர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் உட்பட அனைவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
News November 28, 2025
புதுச்சேரியை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


