News March 27, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நடவடிக்கை விவரங்களை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனுவில், அதிகாரிகள் மீது துறை ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அவருக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஏப்.25க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News December 29, 2025
டிசம்பர் 29: வரலாற்றில் இன்று

*1904 – கவிஞர் குவெம்பு பிறந்தநாள்
*1960 – ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் பிறந்தநாள்
*1974 – நடிகை டுவிங்கிள் கன்னா பிறந்தநாள்
*1987 – 326 நாள்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்து சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்
*2015 – அறிஞர் தமிழண்ணல் நினைவுநாள்
News December 29, 2025
ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் பிரிவில் 13 சுற்றுகள் முடிவில், 4 வீரர்கள் தலா 9.5 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தனர். இதையடுத்து டை பிரேக்கரில் அர்ஜுன் எரிகைசி 3-ம் இடம் பெற்று வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில், கோனெரு ஹம்பி வெண்கல பதக்கத்தை வசப்படுத்தினார். மேக்னஸ் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
News December 29, 2025
ரஷ்யா, உக்ரைன் போர்.. டிரம்ப் முக்கிய தகவல்

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையால் போர் முடிவுக்கு வரலாம் அல்லது நீண்ட காலம் எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், போரினால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடுவதை யாரும் விரும்பவில்லை எனவும் அவர் பேசியுள்ளார். இந்த போரை நிறுத்துவது மிகவும் சிரமமானது என டிரம்ப் குறிப்பிட்டார்.


