News March 27, 2024

திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

image

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர்  அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 27, 2025

திருவள்ளூர்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1<>.இங்கு க்ளிக்<<>> பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News October 27, 2025

MONTHA: திருவள்ளூரில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

மோன்தா புயல் உருவானதை அடுத்து, திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 640 கி.மீ தொலைவில் உள்ள புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News October 27, 2025

திருவள்ளூரை பதம் பார்க்கும் ‘மோன்தா’

image

வங்கக்கடலில் மோன்தா புயல் நேற்று நள்ளிரவு உருவான நிலையில் இன்று (அக்.27) திருவள்ளூர்க்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. நாளை தீவிர புயலாக மாறும் மோன்தா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க.

error: Content is protected !!