News March 27, 2024
தி.மலை: முதியவர் மீது கொடூர தாக்குதல்

போளூர் அடுத்த சந்தவாசல் விளக்கங்கள் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற முதியவரை அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் சதீஷ் மற்றும் சுதா ஆகியோர் தங்கள் ஊரில் நடைபெற்ற தேர் திருவிழாவிற்கு பங்கு பணம் கேட்டு முதியவர் மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட முதியவர் மூர்த்திசந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்சங்கர், சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
Similar News
News August 14, 2025
தி.மலையில் மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’

தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆக.14) செங்கம், கலசப்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க
News August 14, 2025
திருவண்ணாமலையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆக.14) செங்கம் வட்டாரத்தில் மேல்பென்னாத்தூர் சமுதாயக்கூடம், கலசப்பாக்கம் வட்டாரத்தில் ரஜினி மண்டபம், வந்தவாசி வட்டாரத்தில் தென்சேந்தமங்கலம் விபிஆர்சி கட்டடம், சேத்துப்பட்டு வட்டாரத்தில் ஜேபிஜே மஹால், ஆரணி மேற்கு வட்டாரத்தில் சி.எம்.வளர்மதி மண்டபம், வெம்பாக்கம் வட்டாரத்தில் சட்டுவந்தாங்கல் விபிஆர்சி கட்டடம் ஆகிய பகுதிகளின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
News August 13, 2025
திருவண்ணாமலை அரசு பள்ளி ஆசிரியருக்கு டெல்லியில் விருது

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி தமிழ் ஆசிரியர் இரா.முத்து கம்பன் அவர்கள், சர்வதேச அளவிலான Global Best Teacher Role Model Award விருதைப் பெறுகிறார். வரும் 24.08.2025 அன்று, புது டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர், மாநில அளவில் தமிழக அரசின் Dr. ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.