News March 27, 2024
பாஜக ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறது

கேரளாவில் INDIA கூட்டணிக்கு 20 இடங்களில் வெற்றி கிடைக்கும் என திருவனந்தபுரம் காங்., வேட்பாளர் சசி தரூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து பேசிய அவர், “பாஜக ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறது. இதற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடி, பாஜகவை தோற்கடிக்க வேண்டும். கடந்த முறை போல, இந்த முறை பாஜகவால் வெற்றிபெற முடியாது. கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்., வெற்றிபெறும்” என்றார்.
Similar News
News January 16, 2026
சற்றுமுன்: செங்கோட்டையன் தரப்பு அதிர்ச்சி

தவெகவில் விஜய், புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்த இடத்தில் செங்கோட்டையன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் பொது மேடைகளில் பேசி வருகின்றனர். ஆனால், சற்றுமுன் <<18871253>>விஜய் வெளியிட்ட பிரசார பணிக்குழுவில்<<>> செங்கோட்டையன் பெயர் ஆதவ் அர்ஜுனாவின் பெயருக்கு அடுத்ததாக இடம் பெற்றது சர்ச்சையாகியுள்ளது. பிரசார கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கே வழிகாட்டியவரை மட்டுப்படுத்துகிறாரா விஜய் என ஒருசாரார் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் கருத்து?
News January 16, 2026
திமுக அரசின் கொள்ளைத் திட்டம்: அன்புமணி

1553 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ₹9.50 வரை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும். எனவே, சந்தை சராசரி விலையை கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே மின்சாரத்தையும் வாங்க ஆணையிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News January 16, 2026
சனாதன தர்மத்தில் வேரூன்றி நிற்கும் திருவள்ளுவர்: R.N.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, கவர்னர் RN ரவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவரது X-ல், வள்ளுவரின் ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தார்மீக மற்றும் ஆன்மிக உணர்வுகளை வடிவமைத்துள்ளது. பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷமான திருக்குறள், சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலம் கடந்து நிற்கிறது என்று கூறியுள்ளார்.


