News March 27, 2024

மாதவரத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 21, 2025

சென்னையில் பருவமழை இன்று வரை 6% குறைவு!

image

சென்னையில் இன்று (டிச-21) இதுவரை வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 6% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 771.4 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது 724.8 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது சென்னை மண்டலத்தில் இம்முறை கூடுதலாக ஏரிகளில் நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது.

News December 21, 2025

ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

image

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், மற்றும் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் தவறுகள் ஏற்படாமல், நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து விவாதித்தனர்.

News December 21, 2025

சென்னை-நெல்லை வந்தே பாரத் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

image

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் இணை அமைச்சர் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!