News March 27, 2024

மாதவரத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 27, 2025

சென்னையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

புயலாக மாறிய ‘மோன்தா’

image

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.27) புயலாக மாறியது. மோன்தா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், காலையில் 14 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது சென்னையில் இருந்து 480 கிமீ தொலைவில் உள்ளது. திடீரென வேகம் அதிகரித்து 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டு துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News October 27, 2025

சென்னை: வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

image

அரசின் வேலைவாய்ப்பு & பயிற்சித்துறையின் மூலம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, 10th முதல் டிகிரி வரை படித்து, வேலை இல்லாமலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெறுவோரும், சுய உறுதி மொழி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் கிண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!