News January 28, 2025
அரசு பேருந்து பைக் மீது மோதியதில் குழந்தை பலி

முதுகுளத்தூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி – முதுகுளத்தூா் அரசுப்பேருந்து பைக் மீது மோதியது. இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி 5 மாத குழந்தை ருத்ரன் உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த தாய் சத்யாவும், பாட்டி செல்வியும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு செல்வி உயிரிழந்தாா். எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநா் கதிரேசனை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Similar News
News August 22, 2025
ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
News August 21, 2025
சக்கரகோட்டை அருகே ரயிலில் அடிபட்டி ஒருவர் உயிரிழப்பு

இன்று காலை சுமார் 7 மணிக்கு முன்பாக உச்சப்புளி ரயில் நிலையத்திற்கும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சர்க்கரை கோட்டை ரயில்வே கேட்டு அருகே மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் ராமேஸ்வரம் மதுரை பயணிகள் ரயில் வண்டியில் அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
News August 21, 2025
ராம்நாடு: போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! APPLY NOW

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி – 10th/ <