News January 28, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலமாக, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத்தில், தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான டெக்ஸ்டைல்ஸ், அக்ரோ ஜியோ மொபைல் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் மண்டல துணை இயக்குனர் தான்தோன்றிமலை முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் (04324 298588) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Similar News
News November 12, 2025
கரூர்: ராஜவாய்க்காலில் தவறி விழுந்து ஒருவர் பலி!

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே நேதாஜி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதாகர் (55), ராஜவாய்க்கால் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
கரூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் (நவம்பர் 14) அன்று “உழவரை தேடி” வேளாண் திட்ட முகாம்கள் 8 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, மத்தி வட்டங்களில் உள்ள கிராமங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர்க்கடன், அரசு உதவித் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


