News March 27, 2024
ஞாயிறு அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 31) அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படவுள்ளது. ஆனால், அன்றைய தினம் அரசு தொடர்பான சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் வழக்கமான பரிவர்த்தனைகள் செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மார்ச் 29, மார்ச் 31 & ஏப்ரல் 1 வழக்கமான வங்கி சேவைகள் கிடையாது
Similar News
News January 19, 2026
விருதுநகரில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர், நரிக்குடி அருகே குறையறைவாசித்தான் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் சிறுநீரக பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது நிலையை எண்ணி விரக்தி அடைந்து சில நாட்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை.
News January 19, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
News January 19, 2026
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழையில் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.


