News March 27, 2024
ஞாயிறு அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 31) அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படவுள்ளது. ஆனால், அன்றைய தினம் அரசு தொடர்பான சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் வழக்கமான பரிவர்த்தனைகள் செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மார்ச் 29, மார்ச் 31 & ஏப்ரல் 1 வழக்கமான வங்கி சேவைகள் கிடையாது
Similar News
News August 13, 2025
நீங்க தான் தலைவரே முதல் வாத்தியார்.. ஹிருத்திக் ரோஷன்

‘என் முதல் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்’ என ரஜினிகாந்தைக் குறிப்பிட்டு, அவரது 50 ஆண்டுகால திரைப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன். ‘கூலி’ படத்துடன் ஹிருத்திக், ஜூனியர் NTR நடித்துள்ள ‘WAR 2′ படமும் ரிலீஸாகிறது. இந்நிலையில், ஒரு நடிகராக எனது முதல் படியை உங்கள் (ரஜினி) அருகில் இருந்து தொடங்கியதாகக் கூறி அவர் நெகிழ்ந்துள்ளார். நீங்க படம் பார்க்க ரெடியா?
News August 13, 2025
ஒரே வீட்டில் 269 வாக்காளர்கள்

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், முசாஃபர்பூரில் உள்ள ஒரு வீட்டில் 269 வாக்காளர்கள் இருப்பதாக ECI தரவு வெளியிட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரேயொரு வாக்கு மட்டுமே உள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இது BJP – ECI வாக்கு முறைகேட்டிற்கான சான்று என காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
News August 13, 2025
ஆக.. தனிப்பட்ட காரணம் என்று சொல்லக்கூடாது: இபிஎஸ்

அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ‘ஆக.. தனிப்பட்ட காரணம்’, Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்து கொள்ளட்டும் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் பையில் வெடிகுண்டு வெடித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.