News January 28, 2025

கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்திற்கு முன்பாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், யு.ஜி.சி. அமைப்பு பரிந்துரையின்படி மாத ஊதியம் ரூ.57,300 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News

News May 8, 2025

ராணிப்பேட்டை +2 மாணவர்கள் கவனத்திற்கு

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

ராணிப்பேட்டையில் மதுபோதையில் தகராறு

image

பள்ளூரில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது இங்கு நேற்று இரவு கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த கோவர்தனன், பள்ளூரை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராஜை கோவர்தனன் கை, கட்டையால் தாக்கினார். காயமடைந்த செல்வராஜ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து இன்று கோவர்த்தனனை கைது செய்தனர்

News May 7, 2025

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மே-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

error: Content is protected !!