News January 28, 2025
செவிலியர் மயங்கி விழுந்து மரணம்

புதுவை அரியூர் ரமேஷ். தமிழ்நாடு டாஸ்மாக் கடையில் விற்பனையார். இவரது மகள் அபிராமி, இவர் ஊசுடேரி லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு செவிலியராக இரவு பணியில் இருந்த போது, நள்ளிரவில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
கடற்கரையில் ஆண் பிணம். போலீசார் விசாரணை

காரைக்கால் நிரவி கருக்களாச்சேரி கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த நிரவி போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 10, 2025
புதுச்சேரி: 3வது சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் ஷர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்புகளுக்கான 3வது சுற்று தற்காலிக சீட்டு ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் டேஷ்போர்டு உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி தங்களது சீட்டு ஒதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 11 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
புதுச்சேரி 3 ஆம் இடம், எதில் தெரியுமா?

புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆண்டுதோறும் செப்டம்பா் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக தற்கொலை தடுப்பு நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-வரை தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.