News March 27, 2024

கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

image

தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை நேற்று அருள்ராஜ் திரும்பி கேட்ட பொழுது அவரை சக்தி முருகன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்

Similar News

News September 10, 2025

தூத்துக்குடி: கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

image

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களை தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவியாளர் ஆனந்த் பிரகாஷிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

தூத்துக்குடி: வங்கி வேலைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> செப்.30 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி, போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News September 10, 2025

தூத்துக்குடியில் 21 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கோர்ட்டு பயிற்சி முடித்த துணை தாசில்தார்கள் புதிய பணியிடங்களில் பணி நியமனம் செய்தும், நிர்வாக காரணங்களுக்காக துணை தாசில்தார்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 21 துணை தாசில்தார்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!