News March 27, 2024
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3 மணியோடு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றிருக்கிறது. இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 30ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்றைய தினமே வெளியிடப்படும்.
Similar News
News April 22, 2025
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் போர்டு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளது. அதாவது, டிக்கெட் வாங்கிய பக்தர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளது. முன்னதாகவே வருவதால், கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பக்தர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
News April 22, 2025
இந்தியாவை நெருங்கும் பெரிய ஆபத்து.. ஆய்வில் அதிர்ச்சி

இமயமலையில் ஏற்படும் நிலநடுக்கத்தால் இந்தியா பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் பில்ஹாம் கணித்துள்ளார். வட இந்தியாவில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவில் 8.2-8.9 வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அவர், இதனால் சுமார் 30 கோடி பேர் பாதிப்பை சந்திக்க நேரிடலாம் என்றும் கணித்துள்ளார். அண்மைக் காலமாக வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
News April 22, 2025
சம்மரில் செல்போன் ரொம்ப சூடாகிறதா?

தொடர் பயன்பாட்டால், போன் அதிகளவில் சூடாகும். இது சம்மர் சீசனில் இன்னும் அதிகமாகவே நிகழும். இந்த பிரச்னையை தீர்க்க ➢நேரடி வெயிலில் இருந்து போனை விலக்கி வைக்கவும் ➢சார்ஜ் செய்யும் போது அதிகமாக போனை யூஸ் பண்ண வேண்டாம் ➢எப்போதும் தேவையில்லாத பின்னணி ஆப்-களை மூடி வைக்கவும் ➢லொகேஷன் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கவும் ➢அதிக ஸ்பேஸை உரிஞ்சும் கேமிங் ஆப்-களை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். SHARE IT.