News March 27, 2024
திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி.!

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.
Similar News
News October 18, 2025
திருச்சி: நீரில் மூழ்கி முன்னாள் திமுக கவுன்சிலர் பலி

முத்தரசநல்லூர் காமராஜபுரம் காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (41). அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் திமுக கவுன்சிலராக பதவி வகித்து வந்த இவர் நேற்று பெயிண்டிங் வேலைக்கு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று மருதண்டாகுறிச்சி – கூடலூர் ரோட்டில் உள்ள பாசன வாய்க்காலில் கனகராஜ் சட்டமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 17, 2025
திருச்சி: தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் வீர மணிகண்டன் (32). லோடுமேன் ஆக பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது தாய் இறந்ததால், மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வீர மணிகண்டன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 17, 2025
திருச்சி: தமிழ் அறிஞர்களுக்கான அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tamilvalarchithurai.org/agavai/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் வரும் நவ.17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.