News March 27, 2024
தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

தேர்தல் பிரசாரத்தின்போது குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாச வேலைகளுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு குண்டுவெடிப்பை சுட்டிக்காட்டி அக்கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும், அதில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News April 22, 2025
அடுத்த ஆஸ்கர் விருது விழா எப்போது?

98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜன.22ம் தேதி வெளியாகும். இந்த முறை ஆஸ்கர் விருதுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி பரிந்துரைக்கப்படும் அனைத்து திரைப்படங்களையும் அகாடமி உறுப்பினர்கள் பார்த்து, இறுதி ஓட்டெடுப்புக்கு தேர்வு செய்ய வேண்டும்.
News April 22, 2025
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் போர்டு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளது. அதாவது, டிக்கெட் வாங்கிய பக்தர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளது. முன்னதாகவே வருவதால், கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பக்தர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
News April 22, 2025
இந்தியாவை நெருங்கும் பெரிய ஆபத்து.. ஆய்வில் அதிர்ச்சி

இமயமலையில் ஏற்படும் நிலநடுக்கத்தால் இந்தியா பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் பில்ஹாம் கணித்துள்ளார். வட இந்தியாவில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவில் 8.2-8.9 வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அவர், இதனால் சுமார் 30 கோடி பேர் பாதிப்பை சந்திக்க நேரிடலாம் என்றும் கணித்துள்ளார். அண்மைக் காலமாக வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.