News January 27, 2025

8 இளநிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

image

புதுச்சேரி நிதித் துறை துணை சார்பு செயலர் ரத்னகோஷ் கிேஷார் சவுரே நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரியில் நிதித் துறையில் பணியாற்றும் எட்டு இளநிலை கணக்கு அதிகாரிகளுக்கு சீனியர் கணக்கு அதிகாரியாக பதவி உயர்வு அளித்து நிதி துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அந்த எட்டு பேர் அந்தந்த பணியிடங்களுக்கு விரைவில் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது

Similar News

News September 10, 2025

கடற்கரையில் ஆண் பிணம். போலீசார் விசாரணை

image

காரைக்கால் நிரவி கருக்களாச்சேரி கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த நிரவி போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 10, 2025

புதுச்சேரி: 3வது சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் ஷர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்புகளுக்கான 3வது சுற்று தற்காலிக சீட்டு ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் டேஷ்போர்டு உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி தங்களது சீட்டு ஒதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 11 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

புதுச்சேரி 3 ஆம் இடம், எதில் தெரியுமா?

image

புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆண்டுதோறும் செப்டம்பா் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக தற்கொலை தடுப்பு நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-வரை தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

error: Content is protected !!