News January 27, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
தென்காசி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, தென்காசி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
News July 10, 2025
குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் மிகவும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். மேலும் வருடத்திற்கு ஒருமுறை குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த வருடத்திற்கான சாரல் திருவிழா வருகின்ற ஜூலை 19ம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
தென்காசியில் ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

மாநில அளவில் 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்துடன், ஆவணங்களை https://tinyurl.com/Panchayataward தகுதியான ஊராட்சிகள் (or) https://cms.tn.gov.in/cms migrated/document/forms/Samooga Nallinakka Ooraatchi Award Application.pdf பதிவிறக்கலாம். *SHARE IT