News January 26, 2025

கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கிய எம்பி

image

76வது குடியரசு தினத்தில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மூவர்ண கொடியினை எம்பி ராஜேஷ்குமார் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர்கள் பூபதி (துணை மேயர்), ரணா ஆனந்த், துணை பதிவாளர் மேலாண்மை இயக்குநர் RCMS நாகராஜ், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 11, 2025

நாமக்கல்லில் அரசு வேலை: சூப்பர் சம்பளம்!

image

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பிரிவில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.14,000. இப்பணிக்கு நவ.17ம் தேதிக்குள் வகுரம்பட்டி, அம்மா பூங்கா எதிரில் உள்ள சமுதாய கூடம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகமை அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

நாமக்கலில் பெண்கள் அதிரடி கைது

image

நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் அருகே உள்ள ஒரு வீட்டில் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை வசூல் செய்வதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து கைபேசி மற்றும் ரூ.1,000 பணம் திருடிய புவனேஸ்வரி(39) மற்றும் மீனா(25) இருவரையும் பரமத்தி போலீசார் கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

News November 11, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

image

அத்தனூர், வனவியல் விரிவாக்க மையம் சார்பில் நாமக்கல்லில் உள்ள தனியார் நிலங்களில் ஓராண்டுக்கு மேல் தரிசாக விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத நிலங்களிலும், மற்ற விவசாயி நிலங்களின் வயல் முழுவதும், வரப்பு பகுதியிலும் மகாகனி, தேக்கு, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல இன செடிகள் இலவசமாக நடவு செய்து தரப்பட உள்ளது. ஆகவே, ஆர்வமுள்ள விவசாயிகள் 8940133289, 9751051006 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

error: Content is protected !!