News January 25, 2025

ஸ்டிரைக் அறிவித்த லாரி ஓனர்கள்

image

ஓசூர் மற்றும் கர்நாடகா ஆனெக்கல் பகுதியில் ஜல்லி கற்களின் விலையை கிரஷர் உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு ரூ.199 உயர்த்தியதால் சுமார் 3000 லாரி ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் வரும் திங்கள்கிழமை முதல் ஓசூர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார்.

Similar News

News August 18, 2025

விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகள்

image

விநாயகா் சிலையை அமைக்க விரும்புவோர் முன்கூட்டியே துணை ஆட்சியா் (அ) கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். சிலை வைக்க நில உரிமையாளா்கள் இடம் ஒப்புதல் பெறவேண்டும். விநாயகா் சிலையமைக்கும் கொட்டகைகள் எளிதில் தீப்பிடிக்காத பொருள்களால், தனி நுழைவு, வெளியேறும் வசதியுடன், முதலுதவி, தீத்தடுப்பு கருவிகள், சிசிடிவி மற்றும் ஜெனரேட்டா் போன்றவை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News August 18, 2025

கிருஷ்ணகிரி: ரூ.93,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மின்நகர், பத்தளப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் நாளை (ஆக.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..!

error: Content is protected !!