News January 25, 2025
இருக்கை வசதி ஏற்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், தொழில் நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்கள் பணியிடையே அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அமர்வதற்கு ஏதுவாக நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் முத்து நேற்று தெரிவித்துள்ளார். மேலும் இருக்கை வசதி செய்து தராத 12 நிறுவனம் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News November 11, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்று காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ.104 ஆகவும், முட்டை கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.106 ஆகவும் நீடித்து வருகிறது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.5.70-ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
நாமக்கல்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 11, 2025
நாமக்கல்லில் அரசு வேலை: சூப்பர் சம்பளம்!

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பிரிவில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.14,000. இப்பணிக்கு நவ.17ம் தேதிக்குள் வகுரம்பட்டி, அம்மா பூங்கா எதிரில் உள்ள சமுதாய கூடம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகமை அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


