News January 25, 2025

மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்றவும்: விக்ரம ராஜா

image

நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தின் மாநில தலைவர் விக்ரம ராஜா நேற்று வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 30, 2025

தென்காசி: ஆடு ஏறியதால் மோதல்!

image

தென்காசி, கடையம் அருகே அழகம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் (42) வீட்டில் இசக்கி வளர்க்கும் ஆடுகள் கூரை மீது ஏறியதால் முருகன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் முருகனையும் அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினரையும் தாக்கினர். இதுக்குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News September 30, 2025

தென்காசி TNPSC தேர்வில் இத்தனை பேர் அப்செண்டா??

image

தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ஞாயிற்றுக்கிழமை 11,993 பேர் எழுதினர். மொத்தம் 14,980 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,987 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. 53 மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தை ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் சில தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

News September 29, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!