News January 25, 2025
சேலத்தில் குழந்தை அடித்து கொலை; போலீசார் விசாரணை

குகைப் பகுதி சேர்ந்த பசுபதி -சண்முகப்பிரியா தம்பதியின் மூன்று வயது ஆண் குழந்தையை அவரது உறவினர் தமிழரசன் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 10, 2025
சேலம் போலீசார் செய்த தரமான சம்பவம்!

சேலம் அழகாபுரம் பாலம் அருகே நரிக்குறவர் பெண்ணின் 9 மாத பெண் குழந்தை கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இது குறித்து அழகாபுரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குழந்தையை கடத்திய பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நாமக்கலில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்து குழந்தையை மீட்டு சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
News September 10, 2025
சேலம்: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணமா? CALL

சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க
News September 10, 2025
சேலத்தில் நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

சேலம் மாவட்டத்தில் ▶️பனிக்கனூர் பூமி செடி சந்தல் திருமண மண்டபம், ▶️பனமடல் விஜயா தரணி திருமண ஹால், ▶️வெள்ளாளக்குண்டம் ஸ்ரீ வாசவி மஹால், ▶️ஏகாபுரம் ஸ்ரீ ஆதிசேசா திருமண மண்டபம், ▶️மேட்டூர் அணை, சி.எஸ்.ஐ. குட் சேவியர் ஸ்டேடியம், ▶️சேலம் நேரு கலையரங்கம் ஆகிய இடங்களில் நாளை (செப்.11) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.