News January 25, 2025

பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

image

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.

Similar News

News December 23, 2025

100 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

image

வரும் 25-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படவுள்ள கிறிஸ்துமஸ் எவ்வளவு சிறப்புமிக்கது என்பது தெரியுமா? கிறிஸ்துமஸ் தினத்தின் தேதியை கொஞ்சம் கவனியுங்க, 25/12/25. இந்த எண் வரிசை என்பது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. கடைசியாக 1925-ல் வந்தது. அடுத்து 2125-ல் தான் வரும். நீங்க எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்து, இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News December 23, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு… வந்தாச்சு HAPPY NEWS

image

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், துறைசார்ந்த அமைச்சர்களான சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு, பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருள்கள் உள்ளிட்டவை இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.

News December 23, 2025

இலங்கைக்கு, இந்தியா ₹4,000 கோடி நிதியுதவி

image

இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் அநுர குமார திசநாயகே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினார். அப்போது, டிட்வா புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கர், சீரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, இந்தியா சார்பில், சுமார் ₹4,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா துணைநிற்கும் என்றும் கூறினார்.

error: Content is protected !!