News January 25, 2025
மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு

நாளை ஜன. 25 தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காலை 10.00 மணியளவில் 13-17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், தமிழ் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News August 13, 2025
தூத்துக்குடியில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
News August 13, 2025
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல்

தூத்துக்குடி ஆர்டிஓ பிரபு அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (14) காலை 11 மணிக்கு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
News August 13, 2025
தூத்துக்குடியில் நாளை மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் நாளை (13.08.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுன், சுனோஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.