News January 24, 2025
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1200 கோடி கடன்

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 ஆம் ஆண்டில், சேலத்திலுள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு,ரூ.1602 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை ரூ.1200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ரூ.402 கோடியை, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் துவங்க ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிட வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 28, 2025
சேலம்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 28, 2025
சேலம் கலெக்டர் ஆபிசில் கஞ்சாவுடன் வந்த பெண்!

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த 51 வயது பெண் முத்துலட்சுமியிடம் கஞ்சா பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. கெங்கவல்லி அருகே மூலப்புதூர் பகுதியைச் சேர்ந்த இவர், அப்பகுதியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். போலீஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று அவருக்கு எப்படி கஞ்சா கிடைத்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 28, 2025
சேலத்தில் 1.18 லட்சம் நூதன முறையில் மோசடி!

சேலம் கன்னங்குறிச்சி மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் கடந்த 2ஆம் தேதி அழகாபுரம் இந்தியன் ஏடிஎம் வங்கியில் 2000 எடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு பின்னால் முகமூடி அணிந்த ஒருவர் அவரின் ரகசிய எண்ணை பார்த்து அவரின் ஏடிஎம் அட்டையும் நூதன முறையில் மாற்றி உள்ளார். இதனை அடுத்து அவரது அக்கவுண்டில் இருந்து 1.18 லட்சம் மாயமானது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் விசாரணை!


