News January 24, 2025
மும்பை பெண் கேங் ரேப் வழக்கில்… பெரிய ட்விஸ்ட்

மும்பையில் 20 வயதுப் பெண் கொடூரமாக <<15244591>>கேங் ரேப் செய்யப்பட்ட வழக்கில்<<>> பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவருடன் அப்பெண் விரும்பியே பீச்சுக்கு சென்றதாகவும், அப்போது ஆட்டோ டிரைவர் ரேப் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வீட்டுக்கு தெரிந்தால், பெற்றோர் அடிப்பார்கள் என்று பயந்து, அப்பெண் தானே, தன் பிறப்புறுப்புக்குள் பிளேடு, கற்களை சொருகிக் கொண்டு, புகார் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
Similar News
News October 14, 2025
1,968 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் முடிவு

இன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர். காஸா அமைதி ஒப்பந்தப்படி, சிறைகளில் நீண்டகால அடைக்கப்பட்டுள்ள 1,968 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் ஏற்பாடுகளை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு சிறைகளில் இருந்தோரை ஒப்படைப்பு மையங்களுக்கு அனுப்பும் பணிகளை தொடங்கியுள்ளதாகவும், செயல்முறைகள் நிறைவடைந்த பின் காஸாவுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
News October 14, 2025
டிரம்ப், நெதன்யாகுவை வாழ்த்திய PM மோடி

இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டது குறித்து PM மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டது, அவர்களின் குடும்பத்தினரின் துணிவை காட்டுகிறது. அதிபர் டிரம்ப்பின் இணையற்ற அமைதி முயற்சிகள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உறுதியான முடிவும் தான் இதை சாத்தியமாக்கி உள்ளதாக பாராட்டிய மோடி, அமைதியை கொண்டு வந்ததற்காக டிரம்ப்புக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
125 தொகுதிகளை கேட்கிறதா காங்கிரஸ்?

தமிழகத்தில் 125 தொகுதிகளை குறிவைத்து நாம் பணியாற்ற வேண்டும் என காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார். இதனால் திமுகவிடம் காங்கிரஸ் 125 தொகுதிகளை கேட்க நினைக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால் அனைவரின் தொகுதிகளையும் சேர்த்துதான் அப்படி சொல்லப்பட்டதாக செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து தலைமையே முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.