News January 24, 2025

ராணிப்பேட்டையில் நாளை மாதிரித் தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-IV & VAO தேர்விற்கான மாதிரித் தேர்வு நாளை (ஜன.25) 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள், தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

ராணிப்பேட்டை கூட்டுறவு வங்கிகளில் வேலை!-APPLY NOW

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராணிப்பேட்டையில் 45 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <>இந்த இணையதளத்தில்<<>> வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டையில் (04172-270050) கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்!

News August 13, 2025

ராணிப்பேட்டையில் 4,406 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ராணிப்பேட்டையில் 4,406 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!

News August 13, 2025

சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகள் மூடப்படும்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஜே யூ சந்திரகலா உத்தரவிட்டுள்ளார் மேலும் அந்த நாளில் எந்த விதமான மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார் பொதுமக்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் சுதந்திர தினத்தை கொண்டாட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது

error: Content is protected !!