News March 27, 2024
2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை புறநகர் உள்ளிட்ட 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் ரூ.5-10 வரையிலும், ஆத்தூர் சுங்கச் சாவடியில் ரூ. 5-20 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை வரும் ஏப்ரல் 1 தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
Similar News
News January 26, 2026
தவெக முக்கிய நிர்வாகி மீது வழக்கு பாய்ந்தது!

தவெகவின் தேனி மாவட்ட செயலாளராக இருப்பவர் லெப்ட் பாண்டி. இவர் தனது SM-ல் சீமான், சாட்டை துரைமுருகனை பற்றி ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி போலீசில் நாதக சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், லெப்ட் பாண்டி மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. புதிய அப்டேட்

தஞ்சையில் இன்று திமுகவின் மகளிர் அணி மாநாடு ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2000 வழங்கப்படும் என EPS அறிவித்த நிலையில், சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்து CM ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய மாநாட்டில் பெண்களை மையப்படுத்தி புதிய திட்டங்களுடன், மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
News January 26, 2026
அமெரிக்காவின் ரகசிய ஆயுதத்தை வெளியிட்ட டிரம்ப்

வெனிசுலா அதிபர் <<18758081>>மதுரோவை கைது<<>> செய்ய பயன்படுத்தப்பட்ட ரகசிய ஆயுதம் குறித்த தகவலை டிரம்ப் பகிர்ந்துள்ளார். Discombobulator என்பதன் மூலமே வெனிசுலாவில் இருந்த ரஷ்ய மற்றும் சீன ஏவுகணைகளை செயலிக்க வைத்ததாகவும், இதுகுறித்து விரிவாக சொல்ல தனக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீதான தாக்குதல்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


