News January 24, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டல் – வாலிபரிடம் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், 21 வயது வாலிபர் தவறாக நடந்ததாக மண்டபம் போலீசிற்கு குழந்தைகள் நல அலுவலர் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மண்டபம் பொங்காளி தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அபுர் நசீர் (21) என்பவரிடம் குழந்தைகள் நல அலுவலர் ராமேஸ்வரம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
ராமநாதபுரம்: செல்போனை தொலைப்பவரா நீங்கள்..!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த <
News August 13, 2025
சிறையில் உள்ள மீனவர்களை மீட்க சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மனு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த சட்டமன்ற உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகனிடம், நாட்டுப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதி சேனாதிபதி சின்னத்தம்பி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.
News August 13, 2025
ராமநாதபுரம்: நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..!

110/33-11 KV மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (ஆக-14) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பு. *ஷேர்