News January 24, 2025

பேருந்து நிலையத்தில் போலீஸ் வருவாய் துறை குவிப்பு

image

நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் யாதவர் சங்கத்தினர் இன்று நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News August 21, 2025

ராணிப்பேட்டை: இரவு நேர ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் -21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

News August 21, 2025

ராணிப்பேட்டை: மாதம் ரூ.90,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

ராணிப்பேட்டை: BANK OF MAHARASHTRA வங்கியில் நிரந்திர பணியாளராக பணி செய்ய ஒரு வாய்ப்பு. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 22வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஆகஸ்ட் 30க்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கட்டணமும் இருக்கிறது. இதற்கு மாதம் 60,000-90,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து தேர்வு அதன் பின் நேர்முக தேர்வும் நடத்தப்படும், வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

News August 21, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

ராணிப்பேட்டைமாவட்டத்தில் கம்பு, கேழ்வாகு, துவரை, பச்சைப்பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கென மாநில அளவில் விளைச்சல் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 15.03.2026. இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!