News January 24, 2025

தூத்துக்குடி கடற்கரையை காக்க களமிறங்கிய மாணவர் படை

image

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி, ஈஎஃப்ஐ(Environmental Foundation of India) மற்றும் வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் இணைந்து முத்துநகர் கடற்கரையில் நேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கடற்கரை தூய்மை பணியை மேற்கொண்டனர். 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முத்து நகர் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News August 15, 2025

தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2025

தூத்துக்குடி மக்களே போட்டோ எடுக்க ரெடியா?

image

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புகைப்படக் கலைஞர்கள், பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடைபெற உள்ளது.இதில் தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மீனவர்களின் வாழ்க்கை, இயற்கை காட்சி புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பலாம். இதற்கான விதிமுறைகள், விண்ணப்பிக்கும் முறைகளை <>இங்கே கிளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளலாம். SHARE IT

News August 14, 2025

தூத்துக்குடி: மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் வேலைவாய்ப்பு

image

மாவட்ட நலவாழ்வு சங்கம், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் (MLHP) தொகுப்பூதிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.18,000. விண்ணப்பங்களை <>டவுன்லோடு<<>> செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-628002 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!