News January 24, 2025
எமிஸ் தளத்தில் ஆசிரியர்கள் பணிச்சுமை குறைப்பு

எமிஸ் தளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்ய செலவிடும் நேரத்தால் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடிவதில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களது சுமையை பள்ளிக்கல்வித் துறை குறைத்துள்ளது. பயிற்சி வருகை, கருத்து, விநாடி வினா தரவுகள், அடல் ஆய்வகம் தொகுதி நீக்கப்படுவதாகவும், 15 நாளுக்கு மேல் வராத மாணவர் தரவை மட்டும் பதிவேற்றினால் போதும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News August 28, 2025
அதிமுக கூட்டணியில் துணை முதல்வர்.. புது வியூகம்!

நெல்லையில் பேசிய அமித்ஷா TN-ல் கூட்டணி அரசு அமையும் என்றார். அதுவே அண்ணாமலை, EPS-யை முதல்வராக்க உழைக்க வேண்டுமென்றார். இக்கருத்துகளின் பின்னணியில் முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள நெருடல்களை பாஜக சரி செய்யும், ஆனால் கூட்டணி அரசு தான் அமைய வேண்டும் என பாஜக திட்டவட்டமாக EPS தரப்பிடம் சொல்லியதாக தகவல்கள் உள்ளன. துணை முதல்வர் பதவியும் பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.
News August 28, 2025
லோன் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.
News August 28, 2025
கச்சத்தீவை விட்டுத்தர முடியாது: இலங்கை உறுதி

மதுரை மாநாட்டில் கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும் என விஜய் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும், தேர்தல் காலம் என்பதால் அரசியலுக்காக ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரிவித்து வருவதாகவும் இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.