News January 24, 2025

மகளிர் உரிமைத் தொகை…. விரைவில் முக்கிய அறிவிப்பு

image

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை TN அரசு செயல்படுத்தி வருகிறது. 1.14 கோடி பேர் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இன்னும் சிலர் விண்ணப்பித்து காத்து கிடக்கின்றனர். இதை கவனத்தில் வைத்து அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என உதயநிதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை விரைவில் CM ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 4, 2025

Drug overdose: வாரந்தோறும் 12 பேர் பலி

image

இந்தியாவில் வாரம் ஒன்றுக்கு சராசரியாக 12 பேர், மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக NCRB தெரிவித்துள்ளது. 2019 முதல் 2023 வரை 3,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ‘Overdose’ காரணமாக நிகழ்ந்துள்ளன. Opiod வலி நிவாரணிகள், பதற்றத்தை குறைக்கும் மருந்துகள் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என்று கூறும் நிபுணர்கள், போதைப்பொருள் அதிகரிப்பின் அச்சுறுத்தலை இது சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

News November 4, 2025

Worldcup சாம்பியன் கேப்டனின் சொத்து மதிப்பு தெரியுமா?

image

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. BCCI கிரேடு ஏ காண்ட்ராக்ட்டில் ஆண்டுக்கு ₹50 லட்சம், சர்வதேச போட்டிகளுக்கு ₹31 லட்சம், WPL-ல் ₹1.80 கோடி வருமானம் ஈட்டுகிறார். இதுதவிர, ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக ₹10 – ₹12 லட்சம் வரை பெறுகிறார். ஆடம்பர பங்களா, சொகுசு வாகனங்களையும் வைத்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ₹30 கோடியாகும்.

News November 4, 2025

மத்திய அரசு மீது தலைமை நீதிபதி குற்றச்சாட்டு

image

அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி BR கவாய் விமர்சித்துள்ளார். BR கவாய் அமர்வு விசாரித்த Tribunal Reforms Act குறித்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மத்திய அரசு கோரியது. வாதங்களை முழுவதும் கேட்ட பிறகு, நள்ளிரவில் சமர்ப்பித்துள்ள மத்திய அரசின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கவாய், அதை ஏற்க மறுத்துள்ளார்.

error: Content is protected !!