News January 24, 2025
என்னை எங்க வந்து நிறுத்திருக்க பாத்தியா..!

சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், வளர்ப்புப் பூனையால் வேலையை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது லேப்டாப்பில் ராஜினாமா கடிதத்தை டைப் செய்து வைத்திருந்த அந்த பெண், வேலை போய்விட்டால் வருமானத்திற்கு என்ன செய்வது என யோசித்து அனுப்பாமலே வைத்துள்ளார். ஆனால், அவரது வளர்ப்பு பூனை தவறுதலாக Enter பட்டனை அழுத்தியுள்ளது. இதனால், அவர் தனது வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
சிறப்பு TET தேர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3 சிறப்பு TET தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. 2026-ல் ஜனவரி, ஜூலை, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு ஆசிரியர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2011-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் என SC உத்தரவிட்டதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News October 13, 2025
தீபாவளி விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு

தீபாவளி விடுமுறை கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, *கூட்டமான தெருக்கள், சாலைகளில் வெடிக்க வேண்டாம். *பெற்றோர் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். *மூடிய பெட்டிகள், பாட்டில்களில் வைத்து வெடிக்கக் கூடாது. *குடிசைகள் அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். *ஹாஸ்பிடல் அருகே வெடிப்பதை தவிர்க்கவும். SHARE IT.
News October 13, 2025
தேர்தல் நேரத்தில் தேஜஸ்விக்கு வந்த சிக்கல்!

IRCTC ஹோட்டல் தொடர்பான ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. மூவர் மீதும் மோசடி, கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஹார் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இது RJD கட்சிக்கும், தேஜஸ்விக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.