News January 24, 2025
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநா் கைது

புதுவை சேதராப்பட் 13 வயது சிறுமி, சில நாள் முன்பு பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின் வீடு திரும்பினாா். அவரிடம் பெற்றோா் விசாரித்தில் வேலூா் மாவட்டம், சின்னமோட்டூர் காா்த்தியுடன் வாட்ஸ் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இந்நிலையில், சிறுமியை ஏழுமலை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பின்னர், சேதராப்பட்டு போலீசார் ஏழுமலையை போக்சோவில் கைது செய்தனா்.
Similar News
News November 2, 2025
புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

உதவியாளர்களுக்கு ஓர்க்கர் பதவி உயர்வு; ஓர்க்கர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் புதுச்சேரி சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் மேம்பாட்டு துறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News November 2, 2025
புதுவை: பாரீசில் இருந்து பைக்கில் வந்த இளம்ஜோடி

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் கெவின். இவரது தாய்-தந்தையர் புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர்கள். கெவின் அவரது மனைவியான ஈம்மாவிற்கு தனது சொந்த ஊரான புதுச்சேரியை காண்பிக்க விரும்பியுள்ளார். இந்நிலையில் இருவரும் உயர்ரக இருசக்கர வாகனத்தில் 5 மாதங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, நேற்று புதுச்சேரி வந்த அவர்களை, உறவினர்கள் வரவேற்றனர்.
News November 1, 2025
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் உதயநாள் விழா

புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உதயநாள் விழா ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவேலு, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


