News January 24, 2025

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். பொதுமக்கள், ரேஷன் அட்டை புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான மனு அளிக்கலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 21, 2025

மூலனூர்–தாராபுரம் சாலையில் இருசக்கர வாகன விபத்து

image

திருப்பூர் மாவட்டம் டிசம்பர் 20 இன்று விபத்து .விபத்தானது மூலனூர் டு தாராபுரம் சாலை தனியார் ஸ்பேர் பார்ட்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயம். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் ஏற்றி மூலனூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் யார் என்று விவரம் தெரியவில்லை .மூலனூர் காவல்துறை விசாரணை

News December 21, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

திருப்பூர், கூலிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்த, சரவணன் என்பவரை கைது செய்தனர்.

News December 21, 2025

திருப்பூரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் நல்லோசை களமாடு கலைக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுடன் காபி வித் கலெக்டர்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

error: Content is protected !!