News January 24, 2025
கூடுதல் மண்ணெண்ணெய் கேட்கும் தமிழகம்

TNல் கேஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத, ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இதற்காக TNக்கு மாதம் ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்படுவதால், கார்டுதாரர்களுக்கு 1L கூட வழங்க முடியாமல் முதலில் வருவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனால், TNக்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது.
Similar News
News December 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 565
▶குறள்:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
▶பொருள்: யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.
News December 30, 2025
புள்ளிங்கோ அச்சுறுத்தலை நசுக்குக: கார்த்தி சிதம்பரம்

<<18693605>>திருத்தணி சம்பவத்தின்<<>> எதிரொலியாக மாநிலம் முழுவதும் தங்களது சக்தியை போலீஸ் காட்ட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், TN-ல் புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும் என கூறியுள்ளார். வாகன சோதனையை தீவிரப்படுத்துவதுடன், குற்றப்பின்னணி உடையவர்கள் வாரத்திற்கு 3 முறை காவல் நிலையத்தில் ரிப்போர்ட் செய்ய வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 30, 2025
TN-ல் போதைப் பொருள்.. BJP-ஐ சாடிய வீரபாண்டியன்

TN-ல் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருள் புழக்கமே காரணம் என நயினார் சாடியிருந்தார். ஆனால், அதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம் என CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அம்மாநிலங்களில் இருந்து TN-ற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு எதிராக நயினார் குரல் கொடுக்காமல், TN அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.


