News January 24, 2025
குன்னூர்: வியாபாரிகள் சங்கத்துக்கு சீல் வைப்பு

குன்னுார் மார்க்கெட்டில், 20.74 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்த, மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கமிஷனர் இளம்பரிதி உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சையது இப்ராகிம் மற்றும் ஊழியர்கள், ‘சீல்’ வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அதிகாரிகள் கூறுகையில், ‘அதிகபட்சமாக வாடகை பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
Similar News
News October 23, 2025
உதகையில் இன்று புத்தகத் திருவிழா!

உதகையில் 2025ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா, உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இப் புத்தகத் திருவிழா இன்று (அக்டோபர் 24) தொடங்கி, நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் துவங்கும் இந்தக் கண்காட்சி இரவு 7 மணி வரை நடைபெறும். இந்தப் புத்தகக் கண்காட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News October 23, 2025
நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நீலகிரி வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News October 23, 2025
நீலகிரி: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)