News January 24, 2025

குடும்ப அட்டையில் திருத்தும் செய்யணுமா?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை (ஜன.25) வட்ட அளவில், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

Similar News

News September 9, 2025

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 383 மனுக்கள் ஏற்பு

image

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது. இதில் நிலம் சம்பந்தமாக 39 சமூக பாதுகாப்பு திட்டம் 22 வேலை வாய்ப்பு வேண்டி 28 பசுமை வீடு அடிப்படை வசதி வேண்டி 19 இதர துறை சார்பாக 275 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அவர்கள் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

News September 8, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 8, 2025

திருவள்ளூர்: காயலான் கடையாக மாறிய ஆர்.டி.ஓ., அலுவலகம்

image

திருவள்ளூர்: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பறிமுதல் வாகனங்களை போலீசார் குவித்து வைத்துள்ளதால், காயலான் கடை போல் மாறியுள்ளது. நன்றாக உள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், மிகவும் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்காக, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது காயலான் கடை போல் உள்ளது. இதனை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!