News January 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Similar News
News February 11, 2026
கோவை, திருப்பூரில் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

கோவை, திருப்பூரில் இன்று முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 20% உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்பனை சரிந்து ₹100 கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் தேக்கம் அதிகரிக்கும் என்பதால், 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
News February 11, 2026
விஜய் வருகையால் பயத்தில் திமுக: தங்கமணி

சிறுபான்மையினர் வாக்கு தவெகவிற்கு சென்றுவிடுமோ என்ற பயத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் விவகாரத்தில் கூட திமுக அரசியல் செய்வதாக தங்கமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DMK அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மனதில் வைத்து வரும் தேர்தலில் ADMK கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்; தமிழகமும் வளர்ச்சி அடையும் என்றார்.
News February 11, 2026
திமுகவிடம் டிமாண்ட் செய்யும் மமக

2021-ல் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு 5 தொகுதி ஒதுக்கிய திமுக, அதனை வரும் தேர்தலில் <<19072975>>4 முஸ்லிம் கட்சிகளுக்கு<<>> ( முஸ்லிம் லீக், மமக, SDPI, தமிமுன் அன்சாரி) பகிர்ந்தளிக்க திமுக முடிவெடுத்துள்ளதாம். இது இஸ்லாமிய கட்சிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டு பெறுவோம் எனக் கூறியுள்ள ஜவாஹிருல்லா, தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.


