News January 24, 2025
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

2025 வருடத்தின் தை அமாவாசையானது வரும் 28ஆம் தேதி வருவதையொட்டி தரிசனத்திற்காக கோவையிலிருந்து பல்வேறு ஆன்மீக நபர்கள் ராமேஸ்வரம் பயணம் செய்வதை சுட்டிக்காட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை இருந்தது. இந்நிலையில், கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் 27 மற்றும் 28ஆம் தேதி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News October 31, 2025
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் தீவிர கண்காணிப்பு!

அதிவேக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த, கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் திரையுடன் 8 இடங்களில் ஏஐ கேமரா பொருத்தப்பட உள்ளது. விதிமீறல் வாகன எண்கள் திரையில் காணப்படும். வேகம், ஹெல்மெட், சீட் பெல்ட் மீறல்கள் தன்னிச்சையாக பதிவு செய்யப்படும் தற்போது இவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார். மேலும்மேம்பாலத்தில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறை
News October 31, 2025
கோவை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
குனியமுத்தூரில் ரசம் சாப்பிட்ட தொழிலாளி பலி!

கோவை: குனியமுத்தூர், பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (52), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ஆம் தேதி மது போதையில் இருந்தபோது, வீட்டில் ரசம் சமைத்துள்ளார். அப்போது, ரசப் பொடிக்கு பதிலாக தவறுதலாக சாணி பவுடரை (விஷம்) ரசத்தில் கலந்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து கோவை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை!


